வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தொ, தோ



☞ தொழுநோய்; தொழுநோயாளி:
இது பயங்கரமான தோல் நோய். இன்று தொழுநோய் என்று அழைக்கப்படுகிற நோயை மட்டுமே இது குறிப்பதில்லை. ஏனென்றால், வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தொழுநோய் மனிதர்களை மட்டுமல்லாமல் உடைகளையும் வீடுகளையும்கூட பாதித்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் தொழுநோயாளி என்று அழைக்கப்படுகிறார். (லேவி 14:54; லூக் 5:12).

☞ தொழுமரம்:
சித்திரவதை செய்வதற்காகவும் தண்டனை கொடுப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்ட கருவி. சில கருவிகளில், கால்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டன. மற்ற கருவிகளில், கால்கள், கைகள், கழுத்து ஆகியவையும் மாட்டி வைக்கப்பட்டன. (எரே 20:2; அப் 16:24).

☞ தோல் சுருள்:
செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கன்றுக்குட்டியின் தோலால் செய்யப்பட்ட பொருள்; இது எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பாப்பிரஸ் புல் சுருள்களைவிட நீடித்து உழைத்தது. அதனால் பரிசுத்த வேதாகமம் எழுதுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. பவுல் தீமோத்தேயுவிடம் கொண்டுவரச் சொன்ன தோல் சுருள்கள், அநேகமாக எபிரெய வேதாகமத்தின் சில பாகங்களாக இருந்திருக்கலாம். சவக்கடல் சுருள்களின் சில பாகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்தன. (2 தீமொ. 4:13).

☞ தோல் பை:
திராட்சமதுவை நிரப்பி வைப்பதற்காக, வெள்ளாடு, செம்மறியாடு போன்ற விலங்குகளின் முழு தோலால் செய்யப்பட்ட பை. திராட்சமது புளிக்கும்போது, அதிலிருந்து கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உருவாவதால், தோல் பைகளில் அழுத்தம் ஏற்படும். அதனால், புதிய தோல் பைகளில்தான் திராட்சமது நிரப்பப்பட்டது. புதிய தோல் பைகள் விரிவடைந்தன; ஆனால், பழைய தோல் பைகள் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்தன. (யோசு 9:4; மத் 9:17).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக