வெள்ளி, 19 மே, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 3

யோயாக்கீன்

இன்றைய ஈராக்கில், பண்டைய பாபிலோன் நகரத்தின் இடிபாடுகளைத் தோண்டி எடுத்தபோது, இஷ்டார் வாயில் அருகே க்யூனிஃபார்ம், அதாவது, ஆப்புவடிவ எழுத்துகளுள்ள சுமார் 300 பலகைகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அவை, பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்தவை; அவற்றிலுள்ள பெயர் பட்டியல் ஒன்றில், “யுகின், யஹூத் தேசத்தின் ராஜா” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.



இது, யூத தேசத்தின் ராஜாவான யோயாக்கீனைக் குறிக்கிறது; இவர், கி.மு. 617-⁠ல் எருசலேமை முதன்முறையாக நேபுகாத்நேச்சார் கைப்பற்றியபோது பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டார். (2 இராஜாக்கள் 24:11-15) யோயாக்கீனின் ஐந்து மகன்களுடைய பெயர்களும் அந்தப் பலகைகளில் காணப்படுகின்றன. (1 நாளாகமம் 3:17-18).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக