பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கூ - கை
☞ கூடாரப் பண்டிகை:
சேகரிப்புப் பண்டிகை என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகை, ஏத்தானீம் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிவரை நடந்தது. இஸ்ரவேலர்களின் விவசாய வருடத்தின் முடிவில் அறுவடைக்குப் பிறகு இது கொண்டாடப்பட்டது. தங்களுடைய விளைச்சலை ஆசீர்வதித்ததற்காக கர்த்தருக்கு நன்றி சொல்லவும், சந்தோஷமாக இருக்கவும் இஸ்ரவேலர்கள் இதைக் கொண்டாடினார்கள். எகிப்திலிருந்து விடுதலையானதை நினைத்துப் பார்ப்பதற்காக, இந்தச் சமயத்தில் ஜனங்கள் கூடாரங்களில், அதாவது பந்தல்போட்ட இடங்களில், தங்கினார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆண்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டாட வேண்டியிருந்த மூன்று பண்டிகைகளில் இதுவும் ஒன்று. (லேவி 23:34; எஸ்றா 3:4).
☞ கேப்:
1.22 லிட்டருக்குச் சமமான திட அளவை. இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (2இரா 6:25).
☞ கேமோஷ்:
மோவாபியர்களின் முக்கியத் தெய்வம். (1இரா 11:33).
☞ கேரா:
0.57 கிராமுக்குச் சமமான ஓர் எடை. ஒரு சேக்கலில், 20-ல் ஒரு பங்கு. (லேவி 27:25)
☞ கேருபீன்கள்:
விசேஷப் பொறுப்புகளைப் பெற்று, உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற தேவதூதர்கள். சேராபீன்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. (ஆதி 3:24; யாத் 25:20; ஏசா 37:16; எபி 9:5).
☞ கைகளை வைத்தல்:
ஒருவரை விசேஷமான வேலைக்கு நியமிக்கும்போது அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. அதோடு, ஒருவரை ஆசீர்வதிக்கவும் குணப்படுத்தவும் கடவுளுடைய சக்தியின் வரத்தைக் கொடுக்கவும் அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. சில சமயங்களில், மிருகங்களைப் பலி கொடுப்பதற்கு முன்பு அவற்றின் மீது கைகள் வைக்கப்பட்டன. (யாத் 29:15; எண் 27:18; அப் 19:6; 1தீ 5:22).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக